நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த பி.யு.சின்னப்பாவுக்கு ஆரம்பத்தில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தொடர்ந்து நல்ல வாய்ப்புகளும் வராததால், சினிமா வேண்டாம் என்று சாமியாராகிவிட முடிவு செய்தார். அதற்காக விரதமும் மேற் கொண்ட நிலையில், டி.ஆர்.சுந்தரத்தின் ‘உத்தம புத்திரன்’ (1940) வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு.
தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேட படமான இது வெற்றி பெற்றதை அடுத்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார், சின்னப்பா. இந்தப் படத்தைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் பி.யு.சின்னப்பாவை ஹீரோவாக்கி ‘தர்மவீரன்’ என்ற படத்தையும் தயாரித்தது. சம்பத்குமார் இயக்கிய இப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து அவர் ஹீரோவாக நடித்த படம், ‘ஆர்யமாலா’.