சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வந்தது.
இதில் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 567 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.