சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – இமாச்சல பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 274 ரன்களும், இமாச்சல பிரதேசம் 214 ரன்களும் எடுத்தன.
60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. விமல் குமார் 105. ராதாகிருஷ்ணன் 59 ரன்கள் சேர்த்தனர். 307 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இமாச்சல் பிரதேசம் 26.1 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.