சென்னை: புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஹைதராபாத் அணிகள் விளையாடின. சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களும், டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் 353 ரன்களும் எடுத்தன.
23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதரபாத் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 70 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வருண் கவுட் 56, ராகுல் ராதேஷ் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி சார்பில் வித்யுத், ஹெம்சுதேஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.