2018-19 கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு கொடி நாட்டி விட்டு வந்த இந்திய அணியில் புஜாரா மெல்போர்ன், அடிலெய்ட், சிட்னி மைதானங்களில் 3 சதங்களை அடித்து துணைக்கண்டத்துக்கே பெருமை சேர்த்த பேட்டர் ஆனார். ஏனெனில், துணைக் கண்ட அணிகள் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதில்லை. அந்த முறை இந்திய அணி சாதித்தது புஜாராவினால் என்பதை யாரும் மறக்க முடியாது.
ஆனால், தேசத்துக்குப் பெருமை என்பது மட்டுமல்ல துணைக் கண்டத்துக்கே பெருமை சேர்த்த புஜாராவை கர்நாடக ரசிகர்கள் ஒருமுறை ‘ஏமாற்றுக்காரா’ என்ற தொனியில் ‘cheater.. cheater…’ என்று கத்தியது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம். ஒருபுறம் தேசத்தின் பெருமை என்று ரசிகர்கள் தேசப்பற்றைக் காட்ட, இன்னொரு புறம் பிராந்திய அணி மீதான வெறி காரணமாக புஜாராவை ஏமாற்றுக்காரர் என்று ஸ்டேடியத்திலேயே கத்தியது இந்திய ரசிகர்களின் முரண்படுபிளவுண்ட மனநிலையை (split mind) காட்டுவதாகவும் கொள்ளலாம் அல்லது அமெரிக்கக் கவி வால்ட் விட்மன்,