புதுடெல்லி: தனிநபர்களுக்கு சொந்தமான கணினிகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை அணுக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புதிய வருமான வரி மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.
வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.