புதுடெல்லி: புதிய வருமான வரி மசோதா வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பதில் அளித்து பேசும் போது நிர்மலா சீதாராமன் கூறியாதவது: பிப்.13ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தற்போது தேர்வுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இக்குழு அடுத்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.