புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சண்முகம் பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னாள் முதலவர் நாராயணசாமி உள்ளிட்டோர் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் நாராயணசாமி பேசியதாவது: நமக்கு யார் உதவி செய்தாலும் அவர்களை வாழ்நாளில் மறந்துவிடக்கூடாது. ஆனால் அரசியலில் இப்போது நாம் பார்க்கிறோம். துரோகிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் அனுபவித்தவர்கள் தான் முதுகில் குத்துகிறார்கள். நாராயணசாமி எது சொன்னாலும் கவலைப்படாதீர்கள் என்று முதல்வர் ரங்கசாமி சொல்கிறார். ஊழலைப்பற்றி சொன்னால் அவர்களுக்கு கவலை இல்லை.