புதுச்சேரி: “புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாக்க ஆராய்கிறோம்” என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
புதுவை ராஜிவ்காந்தி பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் நிறுவப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று (மார்ச் 3) மருத்துவமனையில் நடந்தது. அப்போது, “புதுச்சேரியை மருத்துவ சுற்றுலா மையமாக்க ஆராய்கிறோம்” என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.