புதுச்சேரி: “சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறீர்கள்” என பாஜக அமைச்சர் மீது சுயேட்சை எம்எல்ஏ புதுச்சேரி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கர், “அரசு பழங்குடியினர் துணைத் திட்டத்தை உருவாக்கி மனைப்பட்டா தருவது, வீடு கட்டி தருவது போன்ற நலத்திட்டங்களை அமலாக்கி மத்திய அரசிடம் நிதி பெறும் நடவடிக்கையை தொடங்குமா?” என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சாய் சரவணன் குமார், “ஏற்கெனவே திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 2000 மனைப்பட்டா ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தரவுள்ளோம்” என்றார்.