புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் இன்று பிற்பகல் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாரதி பூங்கா அருகே ராஜ்நிவாஸ் உள்ளது. இங்கு துணைநிலை ஆளுநர் அலுவலகம், மாளிகை அமைந்துள்ளது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் ராஜ்நிவாஸில் அவர் ஓய்வெடுத்தார். இந்தநிலையில் ராஜ்நிவாஸ் மற்றும் டிஜிபி அலுவலகங்களின் மின்னஞ்சலில் அந்த வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.