புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் ஏற்பட்டுள்ள ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று தண்ணீர் மூலம் பரவியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் கடந்த மாதம் ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று பரவியது. அங்கு இதுவரை 166 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொற்றுக்கு அங்கு ஏற்கெனவே 6 பேர் இறந்திருந்த நிலையில், சென்னையில் உள்ள குழந்தை சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 10 வயது சிறுவன் கடந்த மாதம் 31-ம் தேதி உயிரிழந்தான். இந்த சிறுவன் ஜிபிஎஸ் தொற்று காரணமாக இறந்தது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஜிபிஎஸ் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.