
சென்னை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் ‘ஒர்க்லோடு’ மேனேஜ்மென்ட் குறித்து சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்து தெரிவிப்பது உண்டு. இந்த சூழலில் அது குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியில் விளையாடியபோது பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் காயத்தில் இருந்து மீண்ட அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார்.

