
மும்பை: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான கிரேம் ஸ்மித் பங்கேற்றார். அப்போது அவர், கூறியதாவது: துணைக் கண்ட ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு முன்னரே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விக்கெட்களை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை கையாள்வதற்கான உத்திகளை வகுக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன்.

