பொதுவாக குடும்பங்களில் நாம் காண்பதுதான். ஒரு பிள்ளை செல்லப்பிள்ளை, அவருக்கு எல்லாம் நடக்கும் ஆனால் ஒரு பிள்ளை உழைப்புப் பிள்ளை இவர் எப்போதும் நெருக்கடியிலும் அழுத்தத்திலுமே இருப்பார். இந்திய அணி என்னும் குடும்பத்தில் பும்ரா செல்லப்பிள்ளை, இந்தத் தார்ச்சாலைப் பிட்சில் சிராஜ் உழைக்கும் பிள்ளை. இந்தத் தார்ச்சாலைப் பிட்சில் செல்லப்பிள்ளைக்கு ரெஸ்ட் அளித்து உழைப்புப் பிள்ளை சிராஜிடமிருந்து கூடுதல் உழைப்பு கோரப்பட அந்த பணிக்கு தன் உடல் தகுதியை வைத்திருந்த அவர் பிரமாதமாக கொடுத்த இலக்கை நிறைவேற்றினார்.
எட்ஜ்பாஸ்டன் என்னும் படுமோசமான ஃபிளாட் பிட்சில் சிராஜ் நேற்று 19.3 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது உண்மையில் அசாத்தியமான ஒரு பந்து வீச்சுதான். பிரசித் கிருஷ்ணா சுத்த வேஸ்ட் என்பது புரிந்துவிட்டது, அடுத்து இவருக்குப் பதிலாக யார் என்பதுதான் இப்போது கம்பீர்-கில் கையில் இருக்கும் கேள்வி.