பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வயலாநல்லூரில் தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 48 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள வயலாநல்லூர் பகுதியில் செயல்படும் தனியார் செங்கல்சூளையில் வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக மாவட்ட சட்ட உதவி மைய செயலாளர் நளினிதேவிக்கு இன்று (மார்ச் 26) புகார் வந்தது.