புளோரிடா: அடுத்த வாரம் பூமிக்கு திரும்ப உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ். அவரை அழைத்து வர புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இந்த நிலையில் பூமி திரும்பியதும் உடல் ரீதியான சவால்களை அவர் எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் சுமார் 9 மாத காலம் அவர் தங்கி இருந்ததுதான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. அவரோடு விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோரும் இதே சவாலை எதிர்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.