பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாகார்ஜுனா நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்கள் ‘லைகர்’ மற்றும் ‘டபுள் ஐஸ்மார்ட்’. இந்த இரண்டுமே மாபெரும் தோல்வியை தழுவின. இதில் ‘லைகர்’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. முன்னணி இயக்குநரான பூரி ஜெகந்நாத் விரைவில் மீண்டும் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.