பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
‘ட்ரெயின்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவருடைய அடுத்த படத்தை பூரி ஜெகந்நாத் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.