உடுமலை: பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த உடுமலை இளம் பெண் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை விஜிராவ் நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் எஸ்.மூர்த்தி. உடுமலை தமிழிசை சங்கத்தின் துணை செயலாளராக உள்ளார். இவரது மனைவி எஸ்.ராஜலட்சுமி. உடுமலை அருகேயுள்ள விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக உள்ளார்.