பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என காவல் துறை மீது பாதிக்கப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது பெங்களூரு மைதானத்துக்கு வெளியே வியாழக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பெங்களூருவின் யெலஹங்காவில் உள்ள வீட்டில் சிறுமி திவ்யான்ஷியின் இறுதிச் சடங்குக்காக உறவினர்கள் கூடினர். அப்போது பேசிய திவ்யான்ஷியின் தந்தை சிவகுமார் உருக்கமான பல தகவல்களைப் பகிர்ந்தார்.