புதுடெல்லி: பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் செயல்படுத்தி வருவதாக பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூர் அளித்த பதில்: “மகளிர் தொழில்முனைவோர்களை வளர்க்க அரசு பல்வேறு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1,57,066 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 73,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறைந்தது ஒரு பெண் இயக்குநரைக் கொண்டு இயங்கி வருகின்றன.