நாகர்கோவில்: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி வலியுறுத்தினார்.
மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு வருகிற செப்டம்பர் 24 முதல் 27 வரை குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று நாகர்கோவிலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், “அண்மையில் குமரி மாவட்டத்தில் ஜெமிலா, திருப்பூரில் ரிதன்யா வரதட்சணை மரணங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. வரதட்சணையை தடுப்பதற்கு புதிய சட்டம் தேவை என மாதர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.