சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், “சர்வதேச மகளிர் தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள். இன்று பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நாம் கொண்டாடுகிறோம். பெண்களின் உரிமைகள், சமத்துவம், அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளவும் நாம் தீர்மானிக்கிறோம். நமது சகோதரிகளும் மகள்களும் தடைகளை உடைத்து புதிய எல்லைகளை தொட்டு வருகின்றனர்.