தேர்தலுக்கு இன்னும்10 மாதங்கள் இருக்கும்போதே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு மெனக்கிடுவதைப் பார்த்துவிட்டு, அதே பெண்களை தங்கள் பக்கம் திருப்பும் விதமாக தனது பிரச்சாரத்தில் அதிரடி அறிவிப்புகளை செய்து வருகிறார் பழனிசாமி.
தனது பிரச்சாரப் பயணத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், மாணவர்கள், மீனவர்கள் என பலதரப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசி வருகிறார் பழனிசாமி, ஜெயலலிதா பாணியில், பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்.