சென்னையில் பெண் தொழில் அதிபர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1,000 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.912 கோடி நிரந்தர வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள் ஆறுமுகம். பெண் தொழிலதிபரான இவர், மறைந்த பிரபல தொழில் அதிபர் ஒருவரின் மகள் ஆவார். இவர்களுக்கு சொந்தமாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடந்த 31-ம் தேதி அவரது வீடு உட்பட 3 இடங்களில் 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.