புதுடெல்லி: டெல்லி வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டகி நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாக மற்றொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பின் அதன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி முதன்முறையாக டெல்லி வந்துள்ளார். ஆறு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை டெல்லிக்கு வந்தார். இரண்டாவது நாள் நடத்திய பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பெண் செய்தியாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சைகள் கிளம்பி சமூகவலை தளங்களில் கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் பதிவாகின.