புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு பெண் பத்திரிகையாளர்களை அழைக்காதது வேண்டுமென்றே அல்ல என்றும், அது தொழில்நுட்பப் பிரச்சினை என்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி கூறினார்.
ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமிர் கான் முட்டாகி கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது பெரும் சர்ச்சையாகியது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன.