மதுரை: ‘‘பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை 100 சதவீதம் விரைவாக முடித்து, ஏப்ரல் மாதத்தில் திறக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது’’ என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மதுரை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம், கழிவு நீர் பராமரிப்பு மற்றும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது போதுமான குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். 24 மணி நேரமும் மக்களுக்குக் குடிநீர் வழங்குவதற்காக ரூ.1,609.69 கோடியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக மாநகராட்சிக்கு 135 எம்எல்டி குடிநீர் பெறப்படுகிறது.