தியாகசீலர் பெருந்தலைவர் காமராஜர், அனைவருக்கும் கல்வி வேண்டுமென்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்புக்கு அடித்தளமான, கல்விக் கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தைத் ‘தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடிய அமரகவி பாரதி பிறந்த எட்டையபுரத்தில் தொடங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ‘ஆர்.கே.’ என அழைக்கப்பட்ட ரா.கிருஷ்ணசாமி நாயுடு உடன் இருந்தார். இவர் சென்னா குளத்தைச் சேர்ந்தவர். இந்த சத்துணவுத் திட்டம் ஆரம்பித்ததைக் குறித்து கி.ரா. ஒரு கருத்தைக் கூறினார். ஒருசமயம் கல்வி இயக்குநராக இருந்த என்.டி.சுந்தரவடிவேலு கோவில்பட்டிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபொழுது கி.வேங்கடசுப்பிரமணியம் நெல்லை மாவட்டத்தின் கல்வி அதிகாரியாக இருந்தார்.