மதுரை: கரூர் கிருஷ்ண நாராயணாபுரம் பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர உத்தரவிடக் கோரிய வழக்கில், பொதுக்கழிப்பறை என்பது மக்களுக்கு அவசியமானது; இது மக்களின் அடிப்படை உரிமையும்கூட என நீதிபதிகள் தெரிவித்தனர். கழிப்பறை வசதி செய்ய தாமதம் செய்வது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். ஏற்கெனவே உள்ள இடத்திலோ, புதிதாக தேர்வு செய்யப்பட்ட இடத்திலோ கழிப்பறையை 3 மாதங்களில் கட்டி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க கரூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.
The post பொதுக் கழிப்பறை வசதி: கரூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.