சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 25 மின்சார ரயில்களின் சேவையில் நாளை (மார்ச் 10) மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு மார்ச் 10ம் தேதி (நாளை) காலை 8.35, 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு இதேநாளில் காலை 9.00, 9.30, 10.30, முற்பகல் 11.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.