புதுச்சேரி: தமிழக அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு மத குருக்களும், மடாதிபதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக திமுக அமைச்சர் பொன்முடி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையானது. அவரது இந்த பேச்சு ஆணவத்தின் உச்சமாகும். மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் செயலாகும்.