‘விசுவாவசு’ தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை 1-ம் தேதி, நான் என்னுடைய கிராமத்தில் இருந்தேன். சித்திரை முதல் நாளன்று பொன் ஏர் பூட்டும் வைபவம் கிராமங்களில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதை நல்லேர் பூட்டுதல், ஏர்பூட்டு திருவிழா என பல பெயர்களில் அழைப்பதுண்டு.
கிராமங்களில் தை மாதம் அறுவடை முடிந்துவிடும். அதைத்தொடர்ந்து, சித்திரை 1-ம் தேதி விளைநிலத்தை உழ ஆரம்பித்து அடுத்த சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்துவார்கள். மன்னராட்சி காலத்தில் மன்னர்களே பொன் ஏர் கலப்பையால் நிலத்தை உழுது பணியைத் தொடங்கி வைக்கும் நடைமுறை இருந்தது. அதைப் பின்பற்றி விவசாயிகளும், ஏர் கலப்பையுடன் இரட்டை மாடு பூட்டி தங்களுடைய நிலங்களை உழ ஆரம்பிப்பார்கள். இது ஆதிகாலம் தொட்டு தொடர்ந்து வரும் ஒரு நீண்ட நெடிய பாரம்பரிய விவசாயிகள் திருவிழாவாகும்.