“பொது இடங்களில் கழகத்தினர் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதை கழக நன்மைக்காக மட்டும் சொல்லவில்லை. உங்களுடைய நன்மைக்காகவும் தான் சொல்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் எத்தனை முறை மன்றாடிக் கேட்டாலும் திமுக-வினர் திருந்துவதாக இல்லை.
இதோ, மூத்த அமைச்சர் பொன்முடி தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில் இந்து மத நம்பிக்கை மற்றும் பெண்கள் குறித்து அருவருக்கத் தக்க வகையில் பேசி மீண்டும் ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார். பொன்முடியின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதுமே முதல் ஆளாக பொன்முடிக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்து கண்டித்தார் திமுக எம்பி-யான கனிமொழி.