காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற 30 நாட்களில் விடுமுறையில் சென்று பணி மாறுதல் பெற்றிருக்கிறார் ஷேக் முகையதீன். இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு ஒத்து வராததால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என வருவாய்த்துறை சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் தனி மாவட்டமாக கடந்த 2019 நவம்பர் மாதம் 29ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. வருவாய் அலகில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய எட்டு வட்டங்களில் மூன்று வருவாய் கோட்டங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.