பொள்ளாச்சி: மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்ட் பூசி அழித்த திமுகவினர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கல்விக்காக மத்திய அரசு தர வேண்டிய நிதியை தர மறுத்துள்ளது. இது இந்தியை திணிக்கும் முயற்சி என திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு சில இடங்களில் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.