கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என அரசு தரப்பு சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்தார்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்டனை விவரத்தை நீதிபதி மதியம் அறிவிப்பார்.