துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த போட்டிக்கான கட்டணத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைக்கு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 3 போட்டிகள், சூப்பர் 4 சுற்றில் 3 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா விளங்கியது. அதிலும் பாகிஸ்தான் அணி உடன் இந்த தொடரில் இறுதிப் போட்டி உட்பட மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.