பஞ்சாபில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கம் குறித்து பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராக காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.