புதுடெல்லி: மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெறும் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) அன்று இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் ஏப்.26-ம் தேதி சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும். அன்று நாடு முழுவதிலும் அனைத்து அரசு கட்டிடங்களிலும் உள்ள தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.