ஆமதாபாத்திலிருந்து புறப்பட்ட 30 விநாடிகளில் விழுந்து நொறுங்கிய விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர் வகையை சார்ந்தது. இந்த வகை விமானம் முதன் முறையாக இவ்வளவு பெரிய விபத்தை சந்தித்துள்ளது. போயிங் விமான தயாரிப்பில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக முன்னாள் ஊழியர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மீண்டும் வெளிச்சம் பெற்றுள்ளன.