போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் கடந்தாண்டு நவ.7-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இருந்து பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.