போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு 2 டன் உயிர் காக்கும் மருந்துகள் இந்தியா அனுப்பியுள்ளது.
சூடானில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிராக துணை ராணுவப் படை போரிட்டு வருகிறது. இதில் இரு படைகளின் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சூடான், தெற்கு சூடான் மற்றும் சாத் பகுதியில் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவுப் பற்றாக்குறை மற்றும் நோயால் அவதிப்படுகின்றனர்.