போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேரள காங்கிரஸ் கட்சிக்கு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். இந்நிலையில், தனது சமூக வலைதள கணக்கை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடனை தள்ளுபடி பெற்றுள்ளதாக நடிகை பிரீத்தி ஜிந்தா மீது கேரள காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நியூ இண்டியா கோ ஆப்பரேட்டிவ் வங்கியில், நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு கணக்கு இருந்தது. அந்த வங்கி மூலம் 10 ஆண்டுக்கு முன்பு அவர் ரூ.18 கோடி கடன் பெற்றார். பின்னர், எந்தவித பாக்கியும் இல்லாமல் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்திவிட்டார்.