போலி வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கர்நாடக வழக்கறிஞர் கவுன்சில் புகார் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக வெளிவந்துள்ளது.
“கர்நாடக வழக்கறிஞர் கவுன்சிலுக்கு தவறான தகவல்களை அளித்து, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் எல்எல்பி பட்டம் பெற்றதாக சான்றிதழ்களை சமர்ப்பித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு தாங்கள் படித்ததாக சொல்லப்படும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் முகவரி கூட தெரிவதில்லை” என்று வழக்கறிஞர் கவுன்சில் தெரிவித்துள்ளது.