விபத்தில் உயிரிழந்த மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, அவதூறு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்கின்றனர் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பாரத் செந்தில், இந்து மக்கள் கட்சியின் மாநில தொழிற்சங்கப் பிரிவுத் தலைவராக உள்ளார். இவர் முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக 50 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவருக்கு கீழமை நீதிமன்றங்களில் ஜாமீன் கிடைக்காததால், உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் பெற முயற்சித்து வருகின்றனர்.