மகளிர் டி20 உலகக் கோப்பை (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. நேற்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மெய்கே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் சேர்த்தார்.