
பாலிவுட் சினிமாவின் நட்சத்திரங்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியர் தங்கள் மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். துவாவின் படம் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இருவரும் தங்கள் மகளின் பெயரை அதிகாரபூர்வமாக துவா படுகோன் சிங் அறிவித்தனர்.

