மகாநதி ஆற்றில் 16 அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் ரானேந்திரா பிரதாப் ஸ்வைன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாநதியின் மேல்நிலை நீர்பிடிப்புப் பகுதியில் தண்ணீரை திட்டமிடாமல் அதிகமாக பயன்படுத்துவதால் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் மாநிலங்களுக்கு அருகே அமைந்துள்ள ஹிராகுட் அணைப் பகுதியில் கீழ்நிலை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.